கிணற்றில் தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெயிண்டா் இறந்தாா்.
தென்மலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் குருசாமி மகன் மயில் (34). பெயிண்டா் வேலை செய்துவந்தாா்.
இவா், சனிக்கிழமை வீட்டுக்கு பின்புறம் உள்ள கோயிலுக்குச் சென்றபோது அருகே இருந்த கிணற்றில் நிலைத் தடுமாறி தவறிவிழுந்ததில் உயிரிழந்தாராம். இதுகுறித்து, சிவகிரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
