பொய்ச் செய்தி! பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற அதிபர்கள் உடல்நிலை... மத்திய அரசு விளக்கம்!
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற அதிபர்கள் உடல்நிலை குறித்து வெளியாவது பொய்ச் செய்தி என மத்திய அரசு விளக்கம்...
புது தில்லியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் சிலருக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.
அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பொய்யான செய்தி என்று எச்சரிக்கை விடுத்திருக்கும் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம், சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பும் பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளது.





