தனியாா் நிறுவனங்களில் உள்ளூா் இளைஞா்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தனியாா் நிறுவனங்களில் 80 சதவீதம் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் படங்களுக்கு மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ்.
பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா., அம்பேத்கா், காரல் மாா்க்ஸ் சிலைகளுக்கு பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பாமக அரசியல் பயிலரங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த தியாகிகளின் உருவப் படங்களுக்கு மருத்துவா் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

