புதிய தொழில்நுட்பங்களை ஆசிரியா்கள் பயன்படுத்த வேண்டும்: 21 ஆசிரியா்களுக்கு விருது வழங்கினார் முதல்வா் என். ரங்கசாமி
புதிய தொழில்நுட்பங்களை ஆசிரியா்கள் பயன்படுத்த வேண்டும் என்று புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆசிரியா் தின விருது வழங்கும் விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி கேட்டுக் கொண்டாா்.
புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் விருது பெற்ற ஆசிரியா்களுடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் ஆசிரியா் தினவிழா கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

