சொந்த அரசுக்கு எதிராகவே போராட்டம்; களத்தில் இறங்கிய அமைச்சர்
உத்திர பிரதேசம் மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள ரெக்சடியா கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் சஹானி. பாத்திர வியாபாரியான இவர், கடந்த புதன்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாகத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த வினோத் சஹானியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள கே.ஜி.எம்.யு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக கூட்டணிக் கட்சியான நிஷாத் கட்சியின் தலைவரும், மாநில அமைச்சருமான சஞ்சய் நிஷாத் லக்னோ மருத்துவமனையின் முன்பு அமர்ந்து சொந்த அரசுக்கு எதிராகவே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)