ரவுண்டானா, உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை
திருப்போரூர்: கொட்டமேடு சந்திப்பு சாலையில் ரவுண்டானா மற்றும் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் –- செங்கல்பட்டு இடையே, கொட்டமேடு சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு சாலையில் இருந்து, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, திருப்போரூர், மானாமதி செல்லும், நான்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன. இங்கு, நான்கு புறங்களிலும் தாறுமாறாக வாகனங்கள் திரும்பி செல்கின்றன.
எனவே, கொட்டமேடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இங்கு உயர்கோபுர மின்விளக்கு வசதி இல்லமால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் தாறுமாறாக திரும்பி செல்லும் வாகனங்களால், பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
