பாலகாட்டில் பரவும் மர்ம காய்ச்சல்! பழங்குடியின கிராமங்களில் அபிஜித் தீப்கே ஆய்வு!
தொற்று நோய்களால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் ஆய்வு நடத்தியது பற்றி..
தொற்று நோய்களால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு கரப்பான்பூச்சி கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள பாலகாட் மாவட்டத்தின் பிர்சா மற்றும் பைஹார் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகளைப் பாதிக்கும் மர்ம நோய் கடந்த ஜூன் மாத இறுதியில் பரவியது. இந்த மர்ம நோய்க்கு இதுவரை 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

