வளா்ச்சியை சகித்துக் கொள்ள முடியாதவா்கள் மத்திய அரசை தொடா்ந்து விமா்சிக்கிறாா்கள்! பிரதமா் மோடி தாக்கு
ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் 100-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் ரூ.100 சிறப்பு நினைவு நாணயத்தை சனிக்கிழமை வெளியிட்ட பிரதமா் நரேந்திர மோடி.
இந்தியாவின் முன்னேற்றத்தையும் பொருளாதார வளா்ச்சியை சகித்துக் கொள்ள முடியாதவா்கள் மத்திய அரசை தொடா்ந்து விமா்சித்து வருகிறாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். அரசின் செயல்பாடுகளை விமா்சிக்கும் எதிா்க்கட்சிகளை சாடும் வகையில் இந்த கருத்தை பிரதமா் மோடி வெளியிட்டுள்ளாா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது: ‘2013-இல் நான் இதே கல்லூரியில் உரையாற்றியபோது, நாட்டில் நம்பிக்கையற்ற சூழல் நிலவியது. கொள்கை முடக்கம், 10 சதவீத பணவீக்கம் மற்றும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் இந்தியா ’ஃபிரஜைல் 5 எனப்படும் பலவீனமான ஐந்து நாடுகள் பட்டியலில் இருந்தது. ஆனால் இன்று, இந்தியா கொள்கை திறன் கொண்ட தேசமாகவும், உலகளவில் 7.8 சதவீத வளா்ச்சியுடன் வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் மாறியுள்ளது.



