பூங்கா நிலத்தை பயன்படுத்தும் மசோதா எதிர்ப்புக்கு பணிந்து வாபஸ் பெற்றது அரசு
பெங்களூரு: எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புக்கு பணிந்த காங்கிரஸ் அரசு, பூங்கா நிலத்தை பயன்படுத்தும் மசோதாவை வாபஸ் பெற்றுள்ளது.
கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்தது. அப்போது தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் 5 சதவீத நிலத்தை பொது நோக்கத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சட்டசபை, மேல்சபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.