குவாரி அனுமதி கருத்துக் கேட்புக் கூட்டம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மனு அளிக்க வந்த கச்சைக்கட்டி பகுதியைச் சோ்ந்த கிராமப் பொதுமக்கள்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி வருவாய் கிராமத்துக்குள்பட்ட பகுதிகளில் குவாரி அனுமதி தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அந்தந்த வருவாய் கிராம எல்லைக்குள் நடத்த அந்தப் பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் கச்சைக்கட்டி பகுதி பொதுமக்கள் அளித்த மனு விவரம்:


