விக்கிரவாண்டி பாப்பனப்பட்டு மேம்பாலம் பணி தொய்வு :சீரமத்திற்கு ஆளாகும் வாகன ஓட்டிகள்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு பைபாஸ் சாலையில், மேம்பாலம் அமைக்கும் பணி தொய்வாக நடப்பதால், வாகன ஓட்டிகள் சீரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் தஞ்சாவூர்-கும்பகோணம் நான்கு வழி சாலை பிரியும் இடத்தில், சென்னை- திருச்சி புறவழிச் சாலையில் மேம்பாலம் உள்ளது.
பெருகி வரும் வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டும், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டும் திருச்சி-சென்னை சாலையில் கூடுதலாக மேம்பாலம் அமைக்கவும், பாப்பனப்பட்டு கிராம பொதுமக்கள் பை-பாஸ் சாலையை பாதுகாப்பாக கடக்க அப்பகுதியில், சப்-வே அமைக்கவும், நகாய் 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. தேவகோட்டையை சேர்ந்த மீனாள் அண்ட் கோ நிறுவனம், நகாயுடன் ஒப்பந்தம் செய்து, கடந்தாண்டு செப்டம்பரில் பணியை துவக்கியது.


