சாலையை கூறுபோட்டு மனைகளாக்கிய கும்பலால்... அதிர்ச்சி! : வடிகாலை உடைத்தும், மரத்தை வெட்டியும் அட்டூழியம்
கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கம், விடுதலை நகர்- - ராஜம் நகர் இடையே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பயன்படுத்தி வரும் சாலையை, தனியார் சிலர் போலி வரைபடம் வாயிலாக கூறுபோட்டு மனைகளாக மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவிர, கடந்தாண்டு அங்கு அமைத்த மழைநீர் வடிகாலை உடைத்தும், மரங்களை வெட்டியும் அட்டூழியம் செய்துள்ளதாகவும், சாலையை மீட்டெடுக்கும்படியும், அப்பகுதி மக்கள், செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
சென்னை அடுத்த சோழிங்கநல்லுார் அருகில், புனிததோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, விடுதலை நகர் - -ராஜம் நகர் பகுதிகள் மனைப்பிரிவுகளாக உருவாக்கப்பட்டன.
இங்கு விடுதலை நகர் - ராஜம் நகர் இடையே, 30 அடி அகல சாலை உள்ளது. கடந்த ஆண்டு இங்கு, 1.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.


