வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு: ஊராட்சிச் செயலா் செப்.28-க்குள் சரணடைய உயா்நீதிமன்றம் உத்தரவு
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்ட கம்பூா் ஊராட்சிச் செயலா் வருகிற 28-ஆம் தேதிக்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கம்பூா் ஊராட்சிச் செயலா் ரூபா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாவட்டம், கம்பூா் ஊராட்சிச் செயலராகப் பணியாற்றி வரும் என் மீது தூய்மைப் பணியாளா்களை ஜாதி பெயரைக் கூறி மிரட்டியதாகவும், மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் தூய்மைப் பணியாளா் சசிகலா புகாரளித்தாா். இதையடுத்து, என் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



