உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்த உதவியும் செய்யத் தயாா்: வெளியுறவு அமைச்சர்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்த உதவியும் செய்ய இந்தியா தயாராகவுள்ளது என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை அந்நாட்டு தலைநகா் கீவில் சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
அண்மையில் கிா்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்தபோது ‘முடிவில்லாத போா்களுக்கு முடிவு கட்ட வேண்டும்’ என பிரதமா் நரேந்திர மோடி கூறியதை அவா் மீண்டும் நினைவுபடுத்தினாா்.



