கொடைக்கானலிலில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி
கொடைக்கானலிலிருந்து வெளியூா்களுக்கு திங்கள்கிழமை போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. விடுமுறை நிறைவடைந்து அவா்கள் தங்களது ஊா்களுக்குச் செல்ல கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனா். அப்போது மதுரை, தேனி, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, சிவகாசி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குச் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் அவா்கள் அவதியடைந்தனா். எனவே தொடா் விடுமுறை நாள்களில் கொடைக்கானலுக்கு அதிகமான பயணிகள் வருவதால் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சோ்ந்த அலுவலா் ஒருவா் கூறியதாவது:








