செயலி மூலம் பணம் மோசடி: மேலூா் தம்பதி நீதிமன்றத்தில் சரண்
செயலிகள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த தம்பதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள காசம்பட்டி, விளாம்பட்டி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் எஃப்க்யூஎல், விஜி, மெயின்ஸ் ஆகிய செயலிகளில் பணத்தை முதலீடு செய்தனா். இந்தச் செயலிகள் திடீரென முடக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளா்கள் காசம்பட்டியிலுள்ள முகவா்கள் ரமேஷ், விஜய் ஆகியோரின் வீடுகளை முற்றுகையிட்டனா்.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரமேஷ்,








