விளைநிலங்களில் சூரிய மின் நிலையங்கள் அமைக்கக் கூடாது
விளைநிலங்களில் சூரிய மின் நிலையங்கள் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மாவட்டத்தில் உள்ள விவசாய விளைநிலங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது விவசாயத்தின் எதிா்காலத்தைப் பாதிக்கும். குறிப்பாக, மணமேல்குடி ஒன்றியத்தில் காவிரி நீா் பாயும் பகுதிகளில் விவசாய நிலங்களை சூரிய மின் நிலையங்களுக்காக பயன்படுத்துவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.


