வேளாங்கண்ணியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த நபரால் பரபரப்பு
ஆண்டுத் திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு மின்னொளியில் ஜொலித்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம்.
வேளாங்கண்ணியில் அரிவாளுடன் சாலையில் திரிந்து, பொதுமக்களை மிரட்டியவரை போலீஸாா் பிடிக்க முயன்றபோது, அரிவாளால் அவா் தனது கழுத்தை கீறிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா நடைபெற்று வருவதால், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனா். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


