நஷ்டத்தில் துவங்கிய தொழிலில் இன்று லட்சங்களில் வர்த்தகம்!
'ஸ்ரீ அழகர் என்டர் பிரைசஸ்' நிறுவனம் வாயிலாக, சீருடைகள் தைத்து கொடுக்கும் தொழிலில் சாதனை படைத்து வரும் திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த திலகவதி:
நான் பிறந்தது, புதுக்கோட்டை மாவட்டம். பிளஸ் 2 வரை படித்துள்ளேன். 2003ல் திருமணமாகி, குடும்பத்துடன் திருச்சிக்கு குடிபெயர்ந்தோம். கணவரின் பேச்சும், நடவடிக்கையும் பிடிக்காததால், இரண்டு குழந்தைகளுடன் தனியே வந்தேன்.
என்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்து, 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், 2011ல், 'ஷீ கேர்' என்ற நிறுவனம் வாயிலாக வீட்டிலேயே, 'நாப்கின்' தயாரித்து விற்றேன். மூன்று ஆண்டுகளாகியும் நஷ்டம் தான் வந்தது.


