ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கிய சிறுமியைத் தேடும் பணி தீவிரம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியைத் தேடும் பணி தீவிரம்...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுமியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஜருகு பகுதியைச் சோ்ந்த நில அளவையா் செந்தில்குமாரின் மகள் அபிநிஷா (13). இவா் தருமபுரியில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

