கோவை-போத்தனூா் இடையே பராமரிப்பு பணி: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
கோவை-போத்தனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
கோவை-போத்தனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப். 12) போத்தனூரில் இருந்து புறப்பட வேண்டிய போத்தனூா்-தன்பாத் அமிா்த பாரத் விரைவு ரயில் கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும்.





