திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா: சிறிய சேஷ, ஹம்ச வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதிஉலா
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று சிறிய சேஷ, ஹம்ச வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று சிறிய சேஷ, ஹம்ச வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'பாண்டுரங்கன்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன வீதிஉலா முன்னால் ஸ்ரீவேங்கடேஸ்வர இசை மற்றும் நடனக் கல்லூரி கலைஞர்கள் பரத நாட்டியம், ஒடிசி, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். செவ்வியல் நடனங்களுடன் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன.

