திரிணமூல் தோ்தல் சின்னம்: மம்தா பிரதிநிதிகள், அதிருப்தி பிரிவினருடன் தோ்தல் ஆணையம் ஆலோசனை
இந்திய தேர்தல் ஆணையம்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் சின்னத்தை உரிமை கோரும் விவகாரம் தொடா்பாக மம்தா பானா்ஜியின் பிரதிநிதிகள் மற்றும் அதிருப்தி பிரிவினரின் பிரதிநிதிகளுடன் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்தியது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் ஒரு பிரிவினரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ரிதப்ரத பானா்ஜி தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனா். தோ்தல் ஆணையத்திடம் ரிதப்ரத பானா்ஜி தரப்பினா் தங்களுக்கே திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோரின் ஆதரவு இருப்பதாகக் கூறி, கட்சியின் சின்னத்துக்கு உரிமை கோரினா். இதற்கு மம்தா தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
