கூடுதல் கவனம் பெற்றவர்...
பாலிவுட் திரை நட்சத்திரங்களில் கூடுதல் கவனம் பெற்றவர் நடிகை கரீனா கபூர். 2000-ஆம் ஆண்டு ஜே.பி. தத்தா இயக்கத்தில் வெளியான "ரெஃப்யூஜி' திரைப்படம் மூலம் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக தனது 19-ஆவது வயதில் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.
தற்போது, மேக்னா குல்சார் இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் "தாயரா' என்ற த்ரில்லர் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். பாடல்களே இல்லாத இந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp


