சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!
சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் மூலம் காங்கிரஸ் கட்சி வாக்காளர்கள் பெயர்களை அழிக்க பாஜக சதி செய்வதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி - கோப்புப் படம்
தெலங்கானாவில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் பாஜக அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து வாக்காளர்களின் பெயரை நீக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.





