சுமூகமான பாதையில் இந்திய-சீன உறவுகள்; மேம்படுவது மிக முக்கியம்; மத்திய அரசு திட்டவட்டம்
புதுடில்லி: இந்திய-சீன உறவுகள் சுமூகமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது; மக்களிடையே உறவுகள் மேம்படுவது மிக முக்கியம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டில்லியில் நிருபர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: வரவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யா - உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். பாரிஸ் ஈபிள் டவர் பகுதியில் பி.ஏ.பி.எஸ் அமைப்பின் வருகையின் போது, அங்குள்ள பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவம், இது சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையிலான தனிப்பட்ட விஷயம்; இதில் இந்திய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.



