திருவள்ளூர் அரசு பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் 500 பணியிடம் காலி!மைதானம், உபகரணங்களும் இல்லை என குற்றச்சாட்டு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 555 அரசு பள்ளிகளில், 500 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மைதானம் மற்றும் உபகரணங்களும் இல்லாததால், மாணவ - மாணவியரின் விளையாட்டுத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் 219 நடுநிலைப்பள்ளிகள், 183 உயர்நிலைப்பள்ளிகள், 153 மேல்நிலைப்பள்ளிகள் என, 555 அரசு பள்ளிகள் உள்ளன.
தமிழக பள்ளிக் கல்வி துறையின் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சார்பில், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், உடற்கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், உடற்கல்வி பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும்.


