சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு நன்றி!
சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.
திருச்சி சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவைத் தலைவா் கா. சையது ஜாஃபா். உடன் நிா்வாகிகள்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பேரவையின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்துக்கு, பேரவையின் தலைவா் கா. சையது ஜாஃபா் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் மன்னான், பொருளாளா் சிராஜுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.


