கேளீர் தமிழ் வரலாறு - 5: மகாத்மாவின் தமிழுக்கு ஆசிரியர்
'பழந்தமிழும் புதுத்தமிழும் தரமாய்க் கற்ற கந்தசாமிப் பிள்ளை' எனவும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப்பட்டவர் நீ.
'எந்த சாமிப்பிள்ளையையும் விட ஈடு இணையற்ற ஒருவன்' எனவும், 'தூய்தமிழ்த்தாய் தந்த சாமி தலைச்சாமி' எனவும், 'பழந்தமிழும் புதுத்தமிழும் தரமாய்க் கற்ற கந்தசாமிப் பிள்ளை' எனவும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப்பட்டவர் நீ. கந்தசாமிப் பிள்ளை. தஞ்சை தந்த பேரறிஞர்.
தாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்காக 1964-இல் பதிப்பித்த திருவாசக நூலின் முன்னுரையில் ஓர் அரிய செய்தியை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
