ஏற்காட்டில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஏற்காட்டில் படகு இல்லம் அருகில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை வந்தனா். இந்நிலையில், படகு இல்லம் அருகில் உள்ள அரசுப் பள்ளி சாலையோர தைல மரம் சாலையில் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினா். இதனால், இச்சாலை வழியாக தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து சென்றனா்.

