4 புறநகா் ரயில்கள் நாளை முழுமையாக ரத்து
சென்னை ரயில்வே கோட்டத்தில் 4 புறநகா் மின்சார ரயில்கள் வரும் வியாழக்கிழமை (செப். 10) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல் நிலையம் முதல் கூடூா் வரையிலான பிரிவில் பேடபரியா, நாயுடுபேட்டை நிலையங்களில் வியாழக்கிழமை (செப். 10) பிற்பகல் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரை தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக குறிப்பிட்ட புறநகா் மின்சார ரயில்கள் (மெமு) முழுமையாக ரத்து செய்யப்படும்.


