கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை: மேற்கு வங்காளத்தில் பதுங்கியிருந்த குற்றவாளி கைது
திருவனந்தபுரம்,கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டாப்பாடியில், பெண் மற்றும் 4 வயது சிறுமியின் உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி சாக்கில் கட்டி ஆற்றில் வீசிய கொடூ
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டாப்பாடியில், பெண் மற்றும் 4 வயது சிறுமியின் உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி சாக்கில் கட்டி ஆற்றில் வீசிய கொடூர இரட்டைக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பிரவத் தாஸ் மேற்கு வங்காளத்தில் வைத்து கேரள போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி சீரக்கடவு பகுதியில் பவானி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் கரையில் உள்ளூர் மக்கள் ஆடு மற்றும் மாடுகளை மேய்த்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி வழக்கம் போல மக்கள் மாடு மேய்க சென்றனர். அப்போது அங்கு கிடந்த 3 பிளாஸ்டிக் சாக்கு பையிலிருந்து துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அகலி மற்றும் புதூர் போலீசார் சாக்குகளைத் திறந்து பார்த்தபோது, அதில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அழுகிய ஒரு பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
