அவசரத் தேவை! வாகன நெரிசலை தவிர்க்க மறுசீரமைப்பு தேவையற்ற இடங்களில் வேண்டாம் ‘யு–டர்ன்’
கோவை: மாநகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண, உடனடியாக சில மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோவை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, திருச்சி ரோடு, அவிநாசி ரோடு போன்ற முக்கிய வழித்தடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைத்தும், சில இடங்களில் நெரிசல் தொடர்கிறது.
இதை தவிர்க்க, சில இடங்களில் போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து ‘யு–டர்ன்’ அமைக்கின்றனர்.
லட்சுமி மில்ஸ், சிந்தாமணி மற்றும் வடகோவை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், போக்குவரத்து சிக்னல்களில் இருந்து கணிசமான தொலைவில் ‘யு–டர்ன்’ அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேட்டுப்பாளையம் ரோட்டில் முன்பு ஜீவா நகர் திரும்பும் இடத்தில் யு–டர்ன் இருந்தது.



