கிரைம் கார்னர்: கோவை
பணம் கேட்டு அடாவடி; நான்கு பேர் கைது வடவள்ளி: தொண்டாமுத்துார் ரோட்டில் பொம்மநாயக்கன்பாளைத்தை சேர்ந்த பிருந்தா மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடை நடத்த அதே பகுதியை சேர்ந்த மதியழகனிடம் ரூ.4.50 லட்சம் கடன் பெற்றார். கடன் தொகையை உரிய காலத்தில் திரும்பி கொடுத்தார். இருப்பினும் கூடுதல் பணம் கேட்டு மதியழன் மூன்று பேருடன், கடைக்கு சென்று மிரட்டினார். புகாரின் பேரில் மதியழகன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகனம் திருட்டு; போலீசார் விசாரணை ரேஸ்கோர்ஸ்: பி.என்.பாளையம் ரவிசங்கர் தனது பைக்கைக வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது வாகனம் மாயமாகியிருந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை; வழக்குகள் பதிவு வடவள்ளி: அஜ்ஜனுார் ஜங்ஷன் பகுதியிலுள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் குறித்த சோதனையில், 495 கிராம் குட்கா, பான்பராக் கைப்பற்றப்பட்டன. இதில், புதுக்கோட்டை பெரியகண்ணன், தண்டீயா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

