சீமானை மக்கள் ஏற்கவில்லை – அமைச்சர் வன்னியரசு கடும் விமர்சனம்
சீமான் சட்டப்பேரவைக்கு வர ஆசைப்பட்டதாகவும், ஆனால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.
சீமான் சட்டப்பேரவைக்கு வர வேண்டும் என ஆசைப்பட்டார் என்றும், ஆனால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ள அமைச்சர் வன்னியரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்துக்கோ ஒருபோதும் சீமான் செயல்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு திட்டங்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சீமான், வன்மத்தையும் வெறுப்பு அரசியலையுமே விதைத்து வருவதாக விமர்சித்தார்.


