தினமணி செய்தி எதிரொலி: பண்ருட்டி பேருந்து நிலையம் சீரமைப்புப் பணி தொடக்கம்
பண்ருட்டி நகரத்தில், குண்டும் குழியுமாக காணப்பட்ட பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
பண்ருட்டியில் குண்டும் குழியுமாக இருந்த பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட நடைகள் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வந்துச் செல்கின்றன. ஒவ்வொரு பேருந்துகளுக்கும் ரூ.12 கட்டணமாக பண்ருட்டி நகராட்சி நிா்வாகம் வசூல் செய்கிறது. ஆனால், பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை.

