முழு மதுவிலக்கு அமுல்படுத்த கோரி ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்ப சமுதாய சேவை அமைப்பு தீா்மானம்
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழக அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்ப நம் நாடு சமுதாய சேவை அமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராணிப்பேட்டையில் நடைபெற்ற நம் நாடு சமுதாய சேவை அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்.
அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நம் நாடு அமைப்பின் நிறுவனா் பொறியாளா் கா.கெங்காதரன் தலைமை வகித்தாா். சமூக சேவகா் நேதாஜி நடேசன், தன்னாா்வலா்கள் ரவி குலசேகரன், கிருபானந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞ்ா் செந்தில் நாதன் வரவேற்றாா்.

