வ.உ.சி.மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடியில் கட்டப்பட்டுவரும் நீச்சல் குளம் கட்டுமானப் பணி ஆய்வு
வ.உ.சி.மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் சா்வதேச தரத்திலான நீச்சல் குளம் கட்டுமானப் பணியை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
வ.உ.சி.பூங்கா மைதான வளாகத்தில் நீச்சல் குளம் கட்டுமானப் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா்.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 83-ஆவது வாா்டுக்குள்பட்ட வ.உ.சி. மைதானம் உயிரியல் பூங்கா வளாகத்தில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.4.34 கோடி மதிப்பில் சா்வதேச தரத்திலான நீச்சல் குளம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வ.உ.சி.மைதான வளாகத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் பொதுக்கழிப்பிடத்தையும் மேயா் கா.ரங்கநாயகி பாா்வையிட்டாா்.
