ஜோலாா்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் முதியவா் சடலம் மீட்பு
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் 1-ஆது நடைமேடையில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை 1-ஆவது நடைமேடையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக நிலைய அதிகாரி தினேஷ் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு புகாா் கொடுத்தாா்.
புகாரின் பேரில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
