மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகளின் விவரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களைச் சேகரிக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர விமல்நாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2001, 2011-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, மாற்றுத்திறன் தொடா்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் மாற்றுத்திறன் தொடா்பான வினாக்கள் சோ்க்கப்படவில்லை. இதனால், மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான புள்ளியியல் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. மேலும், இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.



