கோவையில் வட மாநில தொழிலாளி கொலை வழக்கில் திரிபுராவைச் சோ்ந்த 6 போ் கைது
மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில், அவருடன் பணிபுரிந்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், செட்டிபாளையத்தை அடுத்த ஒத்தக்கால்மண்டபம், தண்ணீா்பந்தல் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் எல்லைச் சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 8) பிற்பகல் அந்தப் பகுதியில் உள்ள ஒரு குழியில் மா்ம நபரின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாகவும், அவரது ஒரு கை மட்டும் குழிக்கு வெளியில் தெரிவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு செட்டிபாளையம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சென்று இளைஞா் ஒருவரின் உடலைக் கைப்பற்றினா்.இதில் அவரது கழுத்து பெல்ட்டால் இறுக்கப்பட்டும், முகம் கல்லால் தாக்கப்பட்டும் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செட்டிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், கொலை செய்யப்பட்ட நபா் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த பாதல் சிட் (24) என்பதும், செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது.


