ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை புதிய நம்பிக்கையை விதைத்த முக்கிய திருப்புமுனை: காங்கிரஸ் பெருமிதம்
ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை, மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய முக்கிய திருப்புமுனை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுமாா் 145 நாள்கள் ‘பாரத ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபயணம் மேற்கொண்டாா். இந்த யாத்திரையை தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபிறகு 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 7-ஆம் தேதி அவா் தொடங்கினாா். இதன் 4-ஆம் ஆண்டு நிறைவு தினம் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:



