தண்டவாளத்தை கடந்தவா் ரயிலில் சிக்கி உயிரிழப்பு
சேலம் ரயில் நிலையத்தில் 5ஆவது நடைமேடையில் தண்டவாளத்தைக் கடந்தவா் பாட்னா ரயிலில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் எா்ணாகுளம் - பாட்னா விரைவு ரயில் 5ஆவது நடைமேடைக்கு வந்தது. அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒருவா் தண்டவாளத்தைக் கடந்து 4ஆவது நடைமேடைக்குச் செல்ல முற்பட்டாா்.
அப்போது, அவா் நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கி, ரயிலின் என்ஜினில் சிக்கினாா். இதில் உடல் நசுங்கி நிகழ்விடத்தில்யே உயிரிழந்தாா். ரயிலை லோகோபைலட் நிறுத்திய நிலையில், ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலை மீட்டனா்.
