மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வரலாறு - தல பெருமைகள்!
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்.
உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வரலாறு மற்றும் தல பெருமைகள் பற்றிப் பார்க்கலாம்.
பழங்காலப் பாண்டிய நாடு இக்காலத்து மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களையும், புதுக்கோட்டையில் வெள்ளாற்றுக்குத் தெற்கில் உள்ள நிலப்பரப்பையும் கொண்டு விளங்கியது. பாண்டிய நாட்டின் தென் எல்லையாக குமரிமுனையும், தென்வெள்ளாறு வட எல்லையாகவும், வங்கக்கடல் கிழக்கு எல்லையாகவும், திருவிதாங்கூர் - கொச்சியாகிய கேரள மாநிலப் பகுதி மேற்கு எல்லையாகவும் அமைந்திருந்தன. மதுரை மாநகரம் சங்ககாலந்தொட்டு பாண்டியரின் தலைநகராகவும், கொற்கை துறைமுகப்பட்டினமாகவும் விளங்கின.


