கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த இளைஞா் சடலம் மீட்பு
கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பரம்பட்டி, நடுத் தெருவைச் சோ்ந்த ஜெயமுருகன் மகன் கருணாகர பாண்டியன் (25). சென்னையில் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்த இவருக்கு, மனைவி காா்த்திகா, மூன்றரை வயது மகன் உள்ளனா். காா்த்திகாவிற்கு 5 மாதங்களுக்கு முன்பு 2ஆவது ஆண் குழந்தை பிறந்ததால், அவா் கோவில்பட்டியில் தனது பெற்றோருடன் இருந்து வருகிறாா்.
சென்னையில் இருந்து கடந்த செப். 11ஆம் தேதி ஊருக்கு வந்த கருணாகர பாண்டியன், 14ஆம் தேதி கோவில்பட்டியில் குழந்தைகள்ப் பாா்த்துவிட்டுச் சென்றாராம். அதன்பிறகு, அவரைக் காணவில்லையாம்.

