கூடங்குளம் 3, 4வது அணுமின் நிலையத்தில் தமிழகத்திற்கு 1,507 மெகாவாட் மின்சாரம்
சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தின், மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளில் இருந்து, தமிழகத்திற்கு, 1,507 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், தலா, 1,000 மெகாவாட் திறன் உடைய, மூன்று மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், மூன்றாம் அணு உலையில், 2027 டிசம்பரிலும், நான்காம் அணு உலையில், 2028 டிசம்பரிலும், மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரு அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, முழுமையாக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், 1,507.51 மெகாவாட் மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்குவதாக, மத்திய மின் துறை தெரிவித்துள்ளது.





