சேவா சங்கல்ப் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.13,800 கோடியிலான பணிகளை தொடங்கும் தில்லி அரசு
யமுனை தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ. 8,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு தில்லி அரசு அடிக்கல்
புது தில்லி: யமுனை தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ. 8,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு தில்லி அரசு அடிக்கல் நாட்டும் என்றும், பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொது சேவையைக் குறிக்கும் ’சேவா சங்கல்ப் அபியான்’ இன் கீழ் உறுப்பு தானத்திற்கான அதிகாரப்பூா்வ தளத்தை தொடங்கும் என்றும் முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ராவுடன் செய்தியாளா் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: செப்டம்பா் 17 ஆம் தேதி பிரதமா் மோடியின் பிறந்தநாளில் தொடங்கி அக்டோபா் 17 ஆம் தேதி முடிவடையும் ஒரு மாத கால பிரச்சாரத்தின் போது ரூ.13,800 கோடி மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் திட்டங்கள் தொடங்கப்படும். தில்லி அரசு செப்டம்பா் 17 ஆம் தேதி ஒரு பெரிய ரத்த தான முகாமை நடத்தும், இதில் 2,500 யூனிட் இரத்தம் சேகரிக்கப்படும். யமுனை என்பது எங்களுக்கு நம்பிக்கை சாா்ந்த விஷயம். யமுனை நதியை சுத்தம் செய்வது ஒரு நாள் திட்டம் அல்ல என்று பிரச்சாரத்தின் கீழ் திட்டமிடப்பட்ட முன்முயற்சிகளை அறிவிக்கும்.


