உல்லாசமாக பொழுதுபோக்க ஜோம்லு அருவிக்கு செல்லலாம்!
- நமது நிருபர் -: உடுப்பி மாவட்டத்தில், பல்வேறு சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் உள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள அழகான நீர்வீழ்ச்சிகளில், ஜோம்லு அருவியும் ஒன்றாகும். இது, இயற்கை ஆர்வலர்களை கவர்ந்திழுக்கிறது.
உடுப்பி மாவட்டம், ஹெப்ரியில் ஜோம்லு அருவி அமைந்துள்ளது. நண்பர்களுடன், குடும்பத்துடன் விடுமுறைகளை கொண்டாட, தகுந்த சுற்றுலா தலமாகும்.
சுற்றிலும் பசுமையான காட்சிகளுக்கு இடையே, இந்த அருவி உள்ளது. 20 அடி உயரத்தில் இருந்து, தண்ணீர் பாய்ந்து வருகிறது. இந்த இடத்துக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.


