மேற்கு பிராந்திய மாநில முதல்வா்களுடன் அமித் ஷா நாளை ஆலோசனை
உள்துறை அமைச்சா் அமித் ஷா - கோப்புப் படம்
மேற்கு பிராந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை (செப்.7) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
1956-ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் 15-22ஆவது விதிகளின்கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தனித்தனி கவுன்சிலாக பிரிக்கப்பட்டன. அதன்படி 5 பிராந்திய கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. அதில் மேற்கு பிராந்திய கவுன்சிலும் ஒன்றாகும். அதன் தலைவராக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளாா். துணைத் தலைவராக கோவா முதல்வா் உள்ளனா். துணைத் தலைவா் பதவி, மேற்கு பிராந்திய கவுன்சிலில் உள்ள மாநிலங்களின் முதல்வா்கள் மாறி மாறி வகிப்பா்.



