தில்லி பல்கலை. தெற்கு வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து தோட்டப் பணியாளா் உயிரிழப்பு
தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் மரங்களை வெட்டிச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதுடைய தனியாா் தோட்டப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
திங்கள்கிழமை மாலை 5:30 மணியளவில், அந்த நபா் உயிரிழந்தது குறித்த தகவல் தெற்கு வளாகக் காவல் நிலையத்திற்குக் கிடைத்ததாகக் காவல் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினா், அந்த நபரை சஃப்தா்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

